Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா

அந்தாக்கியா என்பது பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று. கி.மு. 300ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் தளபதிகளுள் ஒருவரான அண்டியோகஸ் உருவாக்கிய அந்நகரம் மத்திய தரைக்கடலுக்கு அப்பாலுள்ள வர்த்தகத்திற்கு ஏதுவாக அமைந்திருந்தது. கிழக்கு-மேற்குப் பகுதிகளுக்கு இடையே குறுக்குச் சாலையாக அமைந்து, புகழடைந்து, பரபரப்பான பகுதியாக உருமாறியது. ரோம சாம்ராஜ்யத்தின் முக்கிய மூன்றாம் நகரமாகி, அவர்களின் வர்த்தகத்திற்கும் பண்பாட்டிற்குமான மையமானது அந்தாக்கியா நகரம்.

கிறிஸ்துவுக்குப் பிறகான ஆண்டுகளில் இயேசு நாதரின் சீடர்களுள் முதன்மையானவரான புனித பீட்டர், முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை அந்நகரில்தான் உருவாக்கினார் என்பது ஐதீகம். புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபமும் அந்தாக்கியாவின் பெருமைகளில் ஒன்றாகச் சேர்ந்துகொள்ள, அந்நகருக்குப் புனித அந்தஸ்தும் ஏற்பட்டுவிட்டது.

- * -

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் விரிவடைய ஆரம்பித்திருந்த இஸ்லாமியப் பேரரசு ஒரு கட்டத்தில் அந்தாக்கியா நகரை எட்டியது. கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஜெருசலம் முஸ்லிம்கள் வசமானபின், 17,000 வீரர்கள் கொண்ட படையுடன் அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி), காலித் பின் வலீத் (ரலி) இருவரும் சிரியாவின் வடக்குப் பகுதிகளை நோக்கிச் சென்றனர். கினாஸ்ஸரீன், அலெப்போ நகரங்களைக் கைப்பற்றி, பின் அங்கிருந்து மேற்கு நோக்கித் திரும்பி அந்தாக்கியாவை நெருங்கினர். நகரிலிருந்து 12 மைல் தொலைவில் ஓரோன்திஸ் ஆறு. அதன் மீது இரும்புப் பாலம். வரலாற்றுப் புகழ் மிக்கப் பாலப் போர் நடைபெற்று, எண்ணற்ற ரோமர்கள் கொல்லப்பட்டு, பெரும் வெற்றி அடைந்தது முஸ்லிம்களின் படை. அதன் பிறகு சிலநாள் முற்றுகையில் அந்தாக்கியா முஸ்லிம்களிடம் சரணடைந்தது. அது கி.பி. 637ஆம் ஆண்டு. பிறகு முந்நூறு ஆண்டுகளுக்குப்பின் கி.பி. 969ஆம் ஆண்டு பைஸாந்தியர்கள் அதை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றினர். அடுத்து நூறு ஆண்டுகள் கழிந்தபின் ஸெல்ஜுக் துருக்கியர்கள் நிகழ்த்திய படையெடுப்புகளின்போது கி.பி. 1085ஆம் ஆண்டு அந்தாக்கியா மீண்டும் முஸ்லிம்கள் வசமானது.

எனவே அந்நகரை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பது சக்ரவர்த்தி அலக்ஸியஸின் இலட்சியம். சிலுவைப்படையினரோ, அந்நகருக்குப் புனித அந்தஸ்து உள்ளது என்ற அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில்அதை மீட்பது தங்களது ஆன்மீகக் கடமை என்று கருதினார்கள். இவ்விதம் அவர்களது நோக்கம் ஒருமுகப்பட்டது. போதாததற்குச் சிலுவைப் படையினரின் உதவியுடன் அந்தாக்கியாவை எப்படியும் மீட்டுவிட வேண்டும் எனும் திட்டத்துடன் அவர்களுக்கு வெகு தாராளமாக உதவி புரிந்து ஆதரவைப் பொழிந்தார் அலெக்ஸியஸ்.

கி.பி. 1097ஆம் ஆண்டு. இலையுதிர் காலத்தின் தொடக்கம். முதலாம் சிலுவைப் படை வடக்குத் திசையிலிருந்து சிரியாவின் உள்ளே நுழைந்து, அந்தாக்கியாவை எட்டியது. ஏறக்குறைய ஜெருசலத்தின் எல்லைப் புறத்தைத் தொட்டுவிட்டதை உணர்ந்தார்கள் அவர்கள். அங்கிருந்து தெற்கே மூன்று வார நடை தூரத்தில் இருந்தது ஜெருசலம். அந்நகருக்கான நேரடிப் பாதை, அந்தாக்கியாவின் ஊடே ஓடியது. அதுதான் யாத்ரீகர்களின் பண்டைய சாலை. அங்கிருந்து மத்திய தரைக்கடலின் கடலோர மார்க்கத்தை அடைந்து லெபனான், ஃபலஸ்தீன் வழியே சென்றால் ஜெருசலம். ஆனால் அவை யாவும் முஸ்லிம்களின் நகரங்கள். நெடுக அவர்களின் கோட்டைகள், கொத்தளங்கள்.

ஜெருசலம் இலக்கு என்று கிளம்பி வந்தவர்கள் அந்தாக்கியாவை அப்படியே விட்டுவிட்டு, அதனுள் நுழையாமல், மாற்றுப் பாதை வழியே ஜெருசலத்திற்குப் படை அணிவகுத்துச் சென்றிருக்க முடியும்தான். ஆனால் ‘அந்தாக்கியா முற்றுகை’ என்பது சிலுவைப் படை-பைஸாந்தியக் கூட்டணியின் மைய நோக்கமாக அமைந்துவிட்டது. பைஸாந்தியர்களின் இலட்சியமும் அந்தாக்கியாவிற்கு ஏற்பட்டிருந்த ஆன்மீக அந்தஸ்தும் ஒருபுறமிருக்க, மேற்கொண்டு தாங்கள் தொடரப் போகும் போர்களுக்கும் மேற்கிலிருந்து வந்து சேரப்போகும் தங்கள் படையினருக்கும் வசதியான ஒரு தலமாகச் சிலுவைப் படை அந்தாக்கியாவைக் கருதியது. ஆசியா மைனரிலிருந்து சிரியாவுக்குள் நுழைய நேரடியான, பாதுகாப்பான பாதை அதுதான் என்பதால் அவர்கள் எப்பாடு பட்டாவது அந்தாக்கியாவைக் கைப்பற்ற நினைத்தார்கள். ஆனால், சிலுவைப் படையின் தலைவர்களாகிய பொஹிமாண்ட், தூலூஸின் ரேமாண்ட் ஆகியோருக்கு அந்தாக்கியாவின் மீது தங்களின் சுய இலாபம் சார்ந்த ஆசையும் ஆர்வமும் உருவாகி வளர ஆரம்பித்தன. அவை பைஸாந்தியர்களின் எதிர்பார்ப்புடன் மோதியதும் அதன் விளைவுகளும்தாம் நாம் பின்னர் காணப்போகும் நிகழ்வுகள்.

பலமான பாதுகாப்பு அரணுடன் அமைந்திருந்தது அந்தாக்கியா. ஓரோன்திஸ் ஆறு, ஸ்டோரின், ஸில்பியஸ் மலைகளின் அடிவாரம் என இயற்கையாகவே பலத்த அரணுடன் அந்நகரம் அமைந்திருந்தது. ஆறாம் நூற்றாண்டில் ரோமர்கள் அதன் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியிருந்தனர். சுற்றி வளைத்து மூன்று மைல் நீளம் அறுபது அடி உயரத்திற்குச் சுவர் எழுப்பி, அறுபது கோபுர அரண்கள் அமைத்து வலு மிகுந்த அரணாக உருவாக்கியிருந்தனர். அந்த நெடிய சுவர் செங்குத்தாகச் சரிந்த இரு மலைகளிலும் ஆற்றின் கரையோரமாகவும் வளைந்து நெளிந்து நீண்டிருந்தது. இவற்றுக்குக் கிரீடம் வைத்தாற்போல் பல நூறு அடி உயரத்தில் சில்பியஸ் மலையின் முகட்டில் வெகு வலுவான கோட்டை கட்டப்பட்டிருந்தது.


ஐநூறு ஆண்டுகள் கழிந்து, முதலாம் சிலுவை யுத்தம் நிகழ்ந்த அந்தப் பதினோராம் நூற்றாண்டின் இறுதியில், காலப் போக்கினாலும் பல பூகம்பங்களாலும் அவை யாவும் பழுதடைந்திருந்தாலும் எளிதில் தாக்கித் தகர்த்துவிட முடியாதபடி, ‘அசைத்துத்தான் பாரேன்’ என்று கம்பீரமாக நின்றிருந்தது அந்த அரண். அனைத்தையும் பார்த்துப் பிரமித்துப்போன பரங்கிப்படை வீரர் ஒருவர், ‘இயந்திரங்களாலோ, மனிதர்களாலோ தகர்க்க முடியாததாக அது இருந்தது’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் –

சிலுவைப் படையினருக்கு முக்கியமான அனுகூலம் வாய்த்திருந்தது. ஸெல்ஜுக் சுல்தான்கள் ஆளுக்கொரு பக்கம் அடித்துக்கொண்டு ஒற்றுமையின்றிப் பிரிந்து கிடந்தார்களே அந்த அவலம். ஐரோப்பாவிலிருந்து கிளம்பி, கண்டம் விட்டுக் கண்டம் கடந்து, கடந்து வந்த பாதையில் முஸ்லிம்களிடமிருந்த பகுதிகளைக் கைப்பற்றி, சிரியாவின் வாசலில் சிலுவைப் படை வந்து நின்ற அந்த நேரத்தில், துதுஷின் மகன்கள் ரித்வான் அலெப்போ நகரையும் துகக் டமாஸ்கஸ் நகரையும் கைப்பற்றித் தனித்தனி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தனர். அந்தாக்கியாவை யாகி சியான் (Yaghi Siyan) என்ற துருக்கியர் ஆட்சி நிர்வாகம் புரிந்துகொண்டிருந்தார். முன்னர் அலெப்போவிற்குக் கட்டுப்பட்டிருந்த அந்தாக்கியா அதனிடமிருந்து பிரிந்து பக்தாதில் தடுமாறிக்கொண்டிருந்த ஸெல்ஜுக் அரசுடன் எல்லை உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு, தன்னாட்சிப் பிராந்தியமாக இருந்தது.

சிலுவைப் போர் ஆபத்துச் சூழ்ந்ததும் தமது சூழ்நிலையை ஆராய்ந்தார் யாகி சியான். 5000 படை வீரர்கள் இருந்தனர். முற்றுகையைத் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு, மக்களுக்குத் தேவையான ஆகார வசதிகள் இருந்தன. கோட்டையும் அவரது கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆனால் அவையாவும் நகரின் தற்காப்புக்குப் போதுமானவையாக இருந்தனவே தவிரச் சிலுவைப் படையைப் போரில் எதிர்க்கும் அளவிற்கு அவரிடம் படை பலம் இல்லை. தாக்குப் பிடிப்பதற்கு அந்தாக்கியாவின் தற்காப்பு அரணை மட்டுமே அவர் நம்பியிருக்க வேண்டிய நிலை. அதே நேரத்தில் அவருக்கு மற்றொரு முக்கியப் பிரச்சினையும் இருந்தது. கிரேக்கர்கள், அர்மீனியர்கள், சிரியா நாட்டின் கிறிஸ்தவர்கள் ஆகியோரும் அந்தாக்கியாவில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமக்கு எதிராகத் திரும்பிவிடுவார்களோ, சிலுவைப் படையுடன் சேர்ந்துகொண்டு தமக்குத் துரோகம் இழைத்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால் போர் ஆபத்துச் சூழ்ந்துள்ள நிலையில் அவர்களை அதிகப்படியாகக் கண்காணிக்க வேண்டியிருந்தது.

சிலுவைப் படை அந்தாக்கியவை நெருங்கியதும் சகோதரர்கள் ரித்வான், துகக் இருவருக்கும் யாகி சியான் உதவி கோரித் தகவல் அனுப்பினார். பக்தாதுக்கும் செய்தி பறந்தது. நற்செய்தி வரும், உதவிப் படைகள் வந்து சேரும் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு காத்திருந்தார் யாகி சியான்.

நம்பிக்கை என்னாயிற்று?

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 17
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 19

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்






1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
15 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
16 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
20 திருநெல்வேலி வரலாறு...!
21 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
22 அந்த இரண்டணா ......
23 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
30 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
33 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
34 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
35 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
36 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
44 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
45 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
46 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
47 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
48 சூஃபிக்களும் புனித போர்களும்
49 யார் தேச விரோதி?
50 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
51 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
52 விடுதலைப்போரில் வீரமங்கையர்
53 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
54 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
55 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
56 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
57 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
58 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
59 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
60 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
61 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
62 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 தமிழகத்தில் முஸ்லீம்கள்
65 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
66 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
67 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
68 பாடலியில் ஒரு புலி
69 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
70 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
71 முதல் சுதந்திரப் பிரகடனம்
72 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
73 காலித் பின் வலீத் (ரலி)
74 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்