Tamil Islamic Media

கட்டுரைகள்

1. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை
  அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Read 14077 Times
 
2. ஒற்றைச்செறுப்பு
 

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.

Read 14735 Times
 
3. திரைகள் விலகட்டும்
 

“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது"

Read 14628 Times
 
4. உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்
 

உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)

Read 15585 Times
 
5. நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
 

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Read 14606 Times
 
6. வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
 

நபித்தோழர்கள் தங்களின் குடும்ப செய்திகள், பொருளாதாரம், மார்க்கம் போன்றவற்றில் சந்தேகம் ஏற்படும் போது எப்படி நபி பெருமான் அவர்கள் பக்கம் திரும்பினார்களோ அது போன்று உடல் ரீதியான நோய்களும், அசவுரியங்களும் ஏற்படும் போதும் நபியிடம் வந்து அதற்கான தீர்வை வேண்டி நின்றார்கள் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் நபி மருத்துவம்.

Read 14658 Times
 
7. முஜாஹிர்களும் மன்னிப்பும்
 

என் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் முஜாஹிர்களைத்தவிர

Read 12933 Times
 
8. நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
 

நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன்அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Read 13179 Times
 
9. தங்க ஓடை: மனிதனின் பேராசை
  உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஆதமுடைய மகனுக்கு தங்கத்தில் ஒரு ஒடயிருந்தால் இரு ஓடை வேண்டும் என்று விரும்புவான். அவனது வாயில் மண்ணறையின் மண்னைத்தவிர வேறு ஒன்றும் நிரப்பாது. தவ்பா செய்பவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். Read 13984 Times
 
10. பயணியே சற்று நில்
  இந்த உலகைப்பற்றி உண்டான செய்தி இது ஒரு நிலையான பொருள் இல்லை, இன்னும் இதன் வெளிரங்கம் ஆடம்பரமாகவும், அழகானதாகவும் இருப்பினும் இதன் உள்ரங்கமோ அழிந்து போகக்கூடியது. அது மனிதர்களை தன் வெளிரங்க அழகால் கட்டிப்போட்டுள்ளது. அதனால் இதன் அழகில் மயங்கிய மனிதன் மறுமைச் சிந்தனைவிட்டும் வெகு தூரம் சென்று விடுகிறான். Read 22198 Times
 
11. அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
  உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம். Read 14277 Times
 
12. என் கண்ணாடி எங்கே?
  நிச்சயமாக உங்களில் ஒருவர் மற்ற சகோதரனின் கண்ணாடி ஆவார். தன் சகோதரரிடம் ஒரு துன்பத்தை ( குறையை) கண்டால் அவர் அதை நீக்கிவிடட்டும். Read 15002 Times
 
13. நன்மைக்கு வழிகாட்டினால்
  உயிருக்குயிரான உயிரிலும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்வூத் அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு நன்மைக்கு வழிகாட்டக்கூடியவருக்கு அதை செய்தவரைப் போன்று கூலி கிடைக்கும். Read 13131 Times
 
14. பொறாமைக்குரியோர் ....
  இப்னு மஸ்வூத் அவர்கள் அறிவிக்கிறார்கள் " இரண்டு பேரின் மீதே தவிர பொறாமைக் கொள்ளக்கூடாது....... Read 13398 Times
 
15. நபியின் மீது பிரியம்
  உங்களில் ஒருவரிடம் அவர் தம் பெற்றோர் இன்னும் குழந்தைகள் இன்னும் மக்கள் அனைவரையும் விட நான் ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிரியத்திற்குரியவராக ஆகாதவரை உங்களில் ஒருவர் உண்மையான முஃமினாக முடியாது Read 14709 Times
 
16. அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
  உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர் மூவர் 1. இஸ்லாமிய போர்வீரன் 2. ஹஜ் செய்பவர் 3. உம்ரா செய்பவர். Read 13217 Times
 
17. ஈமானின் கிளைகள்
  ஈமான் எழுபது சொச்சம் கிளைகளை கொண்டதாகும். அதில் மிகச்சிறந்தது லாயிலாஹ இல்லாஹ் என்று சொல்லுவதாகும். Read 14450 Times
 
18. வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
 

தற்போது தம் சொந்த பந்தங்களோடு ரமலான் பெருநாளைக்கொண்டாட துபை, குவைத், சவூதி போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். 


இந்த நிலையில் இந்தியாவில்  பெருநாளை எப்படி கொண்டாடுவது என்ற கேள்வி இருக்கும், அதற்கான மார்க்க சட்டம்?

Read 13079 Times
 
19. நற்செயல் எது?
  இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் நான் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்களிடம் கேட்டேன். Read 13305 Times
 
20. பட்டாடை
  உலகில் பட்டாடை அணிந்தவர் மறுமையில் அதை அணியமாட்டார். Read 13696 Times
 
21. நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
  .. யார் எனது உம்மத்தில் தீனுடைய விசயத்தில் உள்ள நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்வாறோ, அவரை அல்லாஹ் மார்க்க ஞானமுடையவராக எழுப்புவான். ... Read 15011 Times
 
22. பரிபூரணமான முஸ்லிம்
  பரிபூரணமான முஸ்லிம் யாரெனில் அவருடைய கரம், நாவு கொண்டு மற்ற முஸ்லிம்கள் நிம்மதி பெற்றிருக்க வேண்டும். Read 12992 Times
 
23. பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
  யார் அல்லாஹ்வுக்காக பிரியம் கொள்கிறாறோ , அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வானோ, அல்லாஹ்வுக்காக கொடுப்பானோ, அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருப்பனோ அவர் பரிபூரண ஈமானை பெற்றுக்கொண்டவராவர் Read 13343 Times
 
24. சுவர்க்கத்தின் சாவி
  சுவர்க்கத்தின் திறவு கோல்கள் லாயிலாக இல்லல்லாஹ் என்ற ஷஹாதத் ஆகும் ( வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும்) Read 13234 Times
 
25. மக்களில் சிறந்தவர்
  உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று இன்னும் பிறக்கும் அதை கற்றுக்கொடுப்பவர் ஆவார். Read 13997 Times
 
26. மறுமை
  எச்சரிக்கை: கவனமாகக் கேட்டு கொள்ளுங்கள். உலகம் தற்காலிகமான வியாபாரப் பொருளாகும். (அதற்கு எவ்வித விலையும் மதிப்பும் கிடையாது) Read 13221 Times
 
27. மறைவானவற்றை நம்புவது
  எச்சரிக்கை:..."உனக்கு நடந்தே தீர வேண்டிய சோதனைகளை விட்டும் நீ தப்பிக்கவே முடியாது. உனக்கு முடிவு செய்யப் படாத எந்தச் சோதனையும் உனக்கு வரவே முடியாது".. Read 13788 Times
 
28. அழகிய துஆ
  அல்லாஹ்: கண்களால் பார்க்கப்பட முடியாதவனே! எண்ணங்களால் எட்டப்பட முடியாதவனே! வர்ணிப்பவர்களால் வர்ணிக்கப்பட முடியாதவனே! காலத்தின் ஆபத்துகளுக்கு அஞ்சாதவனே! Read 14531 Times