Tamil Islamic Media

தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.

தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.

இந்தி, இந்துத்துவா, இந்தியா எனும் பா.ஜ.க வின் ஒற்றைக் கலாச்சாரத்தை வேரறுப்போம்.

உள்ளூர் கலாச்சாரங்களில் இஸ்லாம் தலையிடுமா?

ஜல்லிக்கட்டு இஸ்லாமின் அடிப்படையில் கூடுமா?

இதனை முஸ்லிம் பொதுமக்களில் பலரும்,
முஸ்லிம் அறிஞர்களில் சிலரும் இப்போது அதிகமாக கேட்கின்றனர். முஸ்லிம்களில் சொற்பமான சிலரும், தங்களுக்கென்று சட்டத்துறை விதிகள் ஏதுமின்று குர்ஆன் – ஹதீஸ் என்று நேரடி ஆதாரங்களில் தீர்வுகள் கூறுவதாக பிரச்சாரம் செய்யும் ஸலஃபிகள், தவ்ஹீதுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொண்டு “பரிசுத்தவாத இஸ்லாம்” பேசி வாழும் சிலரும் ஜல்லிக்கட்டு பாவம் என்றும், அதனை ஆதரிப்பதும் பாவம் என்றும் பிரச்சாரம் செய்வதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை எதனையும் ஏற்காத ஒற்றைக் கலாச்சாரம் பேசும் மார்க்கம் அல்ல..யூத மதத்தைப் போன்றோ அல்லது பிராமணிய மதத்தைப் போன்றோ ஒற்றைக் கலாச்சாரத்தை வலியுறுத்தும் மார்க்கமும் அல்ல..

பல்வேறு இன மக்களும், பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழும் மக்களும் இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அவர்களின் நடை, உடை, உணவுப் பழக்கம், பண்பாடு, பழக்க வழக்கங்களில் புகுந்து அதிரடி மாற்றங்களை இஸ்லாம் ஏற்படுத்தியதில்லை..

இஸ்லாத்தின் அடிப்படை (அகீதா) கொள்கைகளுக்கு முரண்படும் விஷயங்களை மட்டுமே மாற்றியமைத்த இஸ்லாம், உள்ளூர் பழக்கவழக்கங்களில் தலையிடவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் மக்கா , மதீனா என வேறுபட்ட , கலாச்சாரத்தில், பழக்க வழக்கத்தில் மாறுபட்ட இரண்டு இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தங்கியிருந்துள்ளனர்.

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) தங்கியிருந்த சமயத்தில் மதீனாவின் கலாச்சாரங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் மிகவும் மதிப்பளிக்கவே செய்தார்கள்.

வெளியூரில் இருந்து யாராவது மதீனா நகருக்கு வந்தால் அவரை பைத் படித்து ஊருக்குள் அழைத்துச் செல்வது , திருமணங்களில் கவிதை படிப்பது இவையனைத்தும் மதீனாவில் உள்ள பழக்க வழக்கங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த சமயத்தில் கவிதை படித்தே அழைத்துச் செல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இதனை தடுக்கவில்லை.

இன்றளவும் கூட மதீனாவில் இக்கலாச்சாரம் நடைமுறையில் இருக்கின்றது. ஹஜ் காலங்களில் மதீனா வரும் முதல் விமானப் பயணிகளை பைத் படித்து அழைத்துச் செல்லும் வழக்கத்தை இன்றளவும் மதீனாவாசிகள் நடைமுறையில் வைத்துள்ளனர். இதில் வி.ஐ.பி. யா? சாதாரண மனிதர்களா? என்றெல்லாம் மதீனாவாசிகள் பார்ப்பதில்லை.

திருமணம் முடிந்த பின்பு மாப்பிள்ளை – மணப்பெண் இருவரையும் ஓரிடத்தில் அமர வைத்து பால் கொடுக்கும் பழக்கமும், அச்சமயத்தில் பெண்கள் குலை விடும் பழக்கமும் மதீனாவாசிகளின் கலாச்சாரமாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கும், அன்னை ஆயிஷா (ரழி) க்கும் அபூபக்கர் (ரழி) இன் வீட்டில் இந்நிகழ்ச்சி நடந்த சமயத்தில் அன்சாரிப் பெண்கள் குலை விட்ட சமயத்தில் அபூபக்கர் (ரழி) தடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

அவ்வாறே பாலை சாப்பிட்டு விட்டு மிச்சத்தை மனைவி அன்னை ஆயிஷா (ரழி)க்கு தந்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) இடம் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அனைத்தையும் சாப்பிட்டு
விடாதீர்கள்.
பக்கத்தில் பெண் தோழியாக இருந்த அஸ்மா பின்த் யசீத் (ரழி) க்கும் கொடுங்கள் என்றார்கள். அஸ்மா பின்த் யசீத் (ரழி) எனக்குப் பசிக்கவில்லை என்பார்கள். அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்.

“பசியையும் பொய்யையும் ஒன்றிணைக்காதீர்கள்”
(நூல்: முஸ்னத் அஹ்மது 27511)

27511 - حدثنا عبد الله حدثني أبي ثنا عثمان بن عمر قال ثنا يونس يعنى بن يزيد الأيلي قال ثنا شداد عن مجاهد عن أسماء بنت عميس قالت : كنت صاحبة عائشة التي هيأتها وأدخلتها على رسول الله صلى الله عليه و سلم ومعي نسوة قالت فوالله ما وجدنا عنده قرى الا قدحا من لبن قالت فشرب منه ثم ناوله عائشة فاستحيت الجارية فقلنا لا تردى يد رسول الله صلى الله عليه و سلم خذي منه فآخذته على حياء فشربت منه ثم قال ناولي صواحبك فقلنا لا نشتهيه فقال لا تجمعن جوعا وكذبا قالت فقلت يا رسول الله ان قالت إحدانا لشيء تشتهيه لا أشتهيه يعد ذلك كذبا قال ان الكذب يكتب كذبا حتى تكتب الكذيبة كذيبة

رواه احمد

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي حُسَيْنٍ قَالَ حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ أَنَّ أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ بْنِ السَّكَنِ إِحْدَى نِسَاءِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ دَخَلَ عَلَيْهَا يَوْمًا فَقَرَّبَتْ إِلَيْهِ طَعَامًا فَقَالَ لَا أَشْتَهِيهِ فَقَالَتْ إِنِّي قَيَّنْتُ عَائِشَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جِئْتُهُ فَدَعَوْتُهُ لِجِلْوَتِهَا فَجَاءَ فَجَلَسَ إِلَى جَنْبِهَا فَأُتِيَ بِعُسِّ لَبَنٍ فَشَرِبَ ثُمَّ نَاوَلَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَفَضَتْ رَأْسَهَا وَاسْتَحْيَا قَالَتْ أَسْمَاءُ فَانْتَهَرْتُهَا وَقُلْتُ لَهَا خُذِي مِنْ يَدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ فَأَخَذَتْ فَشَرِبَتْ شَيْئًا ثُمَّ قَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطِي تِرْبَكِ قَالَتْ أَسْمَاءُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَلْ خُذْهُ فَاشْرَبْ مِنْهُ ثُمَّ نَاوِلْنِيهِ مِنْ يَدِكَ فَأَخَذَهُ فَشَرِبَ مِنْهُ ثُمَّ نَاوَلَنِيهِ قَالَتْ فَجَلَسْتُ ثُمَّ وَضَعْتُهُ عَلَى رُكْبَتِي ثُمَّ طَفِقْتُ أُدِيرُهُ وَأَتْبَعُهُ بِشَفَتَيَّ لِأُصِيبَ مِنْهُ مَشْرَبَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ لِنِسْوَةٍ عِنْدِي نَاوِلِيهِنَّ فَقُلْنَ لَا نَشْتَهِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا فَهَلْ أَنْتِ مُنْتَهِيَةٌ أَنْ تَقُولِي لَا أَشْتَهِيهِ فَقُلْتُ أَيْ أُمَّهْ لَا أَعُودُ أَبَدًا

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنِ ابْنِ أَبِي الْحُسَيْنِ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ كُنَّا فِيمَنْ جَهَّزَ عَائِشَةَ وَزَفَّهَا قَالَتْ فَعَرَضَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبَنًا فَقُلْنَا لَا نُرِيدُهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْمَعْنَ جُوعًا وَكَذِبًا( حم ) 27639

அன்சாரிகள் திருமணங்களில் பாட்டு படிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்ததில்லை.

அன்சாரி உறவினர்களில் ஒருபெண்ணுக்கு அன்னை ஆயிஷா (ரழி) திருமணம் செய்து வைத்தார்கள்.

கேள்விப்பட்ட அண்ணல் நபி (ஸல்) கவிதைப் படிக்க யாரையும் அனுப்பினீர்களா? என்று வினவினார்கள்.
இல்லை என்று கூறவே அனுப்பியிருக்கலாமே என்று கூறிவிட்டு அன்சாரிகள் திருமணங்களில் இவ்வாறு கவிதைப் படிப்பார்கள் என்று கூறி அதனைப்படித்தும் காட்டினார்கள்.

وروى أيضا عن الربيع بنت معوذ بن عفراء - رضي الله تعالى عنها - قالت جاء النبي
- صلى الله عليه وسلم - فدخل حين بنى علي فجلس على فراشي كمجلسك مني، فجعلت جويريات لنا يضربن بالدف ويندبن من قتل من آبائي يوم بدر، وقالت له إحداهن وفينا نبي يعلم ما في غد فقال: دعي هذه، وقولي بالذي كنت تقولين (1).

وروى ابن ماجه عن ابن عباس - رضي الله تعالى عنهما - قال: أنكحت عائشة ذات قرابة من الانصار فجاء رسول الله صلى الله عليه وسلم فقال: أهديتم الفتاة ؟ قالوا: نعم، قال: أرسلتم معها من يغني ؟ قالت: لا، فقال رسول الله صلى الله عليه وسلم: إن الانصار قوم فيهم غزل، فلو بعثتم معها من يقول أتيناكم أتيناكم فحيونا نحييكم (2).
رواه ابن ماجه
எங்களிடம் ஒரு நபி உள்ளார். அவர் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவார்? என்ற வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த நபி (ஸல்) அவர்கள் மற்றபடி கவிதை படிக்க அனுமதி மறுக்கவில்லை.

அவ்வாறே விழாக்காலங்களில் தப்ஸ் அடிப்பதும் மதீனாவின் கலாச்சாரம் தான்.

ஆதலால்தான் இதனை அறியாத அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆரம்பத்தில் இதனை தடுத்தார்கள். மதீனாவின் கலாச்சாரத்திற்கு நபி (ஸல்) அனுமதி தந்தார்கள்.

1479 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ
دَخَلَ عَلَيَّ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الْأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ بِهِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ أَبُو بَكْرٍ أَبِمَزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا
و حَدَّثَنَاه يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ بِهَذَا الْإِسْنَادِ وَفِيهِ جَارِيَتَانِ تَلْعَبَانِ بِدُفٍّ
رواه مسلم
وأخرج الطبراني من حديث السائب بن يزيد " أن النبي صلى الله عليه وسلم رخص في ذلك " . قوله : ( الدف والصوت ) أي ضرب الدف ورفع الصوت .

உள்ளூர் வழக்காறுகளும் நாட்டுச் சட்டங்களும்

உலகின் எல்லா நாடுகளிலும் உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளிக்கப்படுவதுண்டு. நமது அரசியல் சாசனத்தில் உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) பல உள்ளூர் வழக்காறுகளுக்கு மதிப்பளித்துள்ளார்கள். பேரித்தம் பழச் செடியில் ஆண் –பெண் செடியை ஒன்றாக்கி கட்டும் வழக்காறை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள்.

ஜல்லிக்கட்டும் தமிழ்க் கலாச்சாரமும்

தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் திருமணம் மற்றும் பல்வேறு விஷயங்களில் உடை, உணவு, பழக்க வழக்கங்களில் தமிழ்க் கலாச்சாரத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

திருணமங்களில் மணப்பெண்ணுக்கு பட்டுச் சேலை அணியும் வழக்கம் அரபுக் கலாச்சாரமல்ல..அது தமிழ்க் கலாச்சாரமே ஆகும்.

சோறு சாப்பிடுவதும், உறவுகள் வைத்து சகோதர சமயத்தவர்களிடம் பழகுவதும் நமது தமிழகத்தில் மட்டுமே உள்ள வழக்கமாகும்.

ஜல்லிக்கட்டு என்பது மிருகத்தை வைத்து விளையாடுவது என்பதற்கு அப்பால் அது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இதனால் தான் இத்தகைய விளையாட்டுக்களுக்கு உமர் (ரழி) அவர்கள் அனுமதி தந்தார்கள்.

எகிப்தில் ஒட்டகங்களுக்கிடையிலான ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் தான் கவர்னர் அம்ரு இப்னு ஆஸ் (ரழி) மகனுக்கு ஒரு கிறிஸ்தவரின் உரிமையை நிலைநாட்ட தண்டனை தந்தார்கள் கலீஃபா உமர் (ரழி)

மனித உரிமையா? மிருக உரிமையா? என்றால் மிருகங்களை விட மனிதனுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார் டாக்டர் யூசுஃ.ப் அல் கர்ளாவி

الانسان مقدم علي الحيوان மனிதன் மிருகத்தை விட முற்படுத்தப்படுவான்.

மிருகங்களை ஒன்றுக்கொன்று மோத விடுவதை தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களே தவிர காளை போன்ற பிராணிகளை அடக்குவதையோ, வீரதீர விளையாட்டுக்களையோ தடுக்கவில்லை.
இன்னும் இத்தகைய வீரதீர விளையாட்டுக்களை நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தே உள்ளார்கள்.

இன்றளவும் அரபுக்களுக்கு மத்தியில் வாள் சண்டை விளையாட்டுக்கள் நடைமுறையில் இருக்கவே செய்கின்றன. சாகசம் என்று பார்க்காமல் ஆபத்து என்று பார்த்தால் அதனையெல்லாம் தடை செய்ய வேண்டியது வரும்.

மிருகங்களைப் பொருத்தவரை மனிதனுக்காகத் தான் அவை படைக்கப்பட்டிருக்கனவே தவிர அவற்றுக்காக மனிதன் படைக்கப்படவில்லை…

இங்கே இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் எழுந்துள்ள எழுச்சியல்ல..

மத்திய பாசிச அரசின் தொடர் துரோகங்களுக்தெதிராக ஏற்பட்டுள்ள எழுச்சியாகும்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை மறுப்பு, அணுக்கழிவு திணிப்பு, நீட் எனும் சமூக நீதி மறுப்பு நுழைவுத்தேர்வு திணிப்பு, பணமதிப்பு நீக்கம், வறட்சி நிவாரணம் தர மறுப்பு, வர்தா புயல் பாதிப்பை ஏற்க மறுப்பு போன்ற தொடர் துரோகங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள எழுச்சியாகும்.....

தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.

இந்தி, இந்துத்துவா, இந்தியா எனும் பா.ஜ.க வின் ஒற்றைக் கலாச்சாரத்தை வேரறுப்போம்.

- As explained by Imam Abul Hasan Fasi 






No articles in this category...