Tamil Islamic Media

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
''அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்'' (புஹாரி).

2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
''எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).
 
ஆயத்துல் குர்ஸி:

''அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம'' (பகரா 2:255).

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:

'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
''எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்:
''உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்:
''எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? ''பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:
''எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
''முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
''எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்''. (திர்மிதி)

13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
''அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
''உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
''முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16.''லா இலாஹ இல்லல்லாஹ்'' வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
''எவர் ''லா இலாஹ இல்லல்லாஹ்'' வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்'' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
''நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் ''உக்காஷா''உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

''நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்'' (குர்ஆன் 8:107,108).


 
 
__�இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!�

 

(As received through Email)






1 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?

பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன்.

2 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -

பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்பது மற்றுமொரு புள்ளிவிவரம்.

3 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது

போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது.

4 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது?

5 ︎நேர்மை என்பது...

நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது.

6 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
7 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
8 பாலஸ்தீனத்தின் பெருமை
9 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
10 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
11 உணரப் படாத தீமை சினிமா
12 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
13 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
14 விரக்தி விஷத்தை விட கொடியது
15 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
16 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
17 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
18 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
19 அந்தப் பெண்களாக நாம்...
20 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
21 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
22 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
23 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
24 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
25 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
26 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
27 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
28 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
29 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
30 இளையான்குடியில் உருது மக்கள்
31 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
32 மரணம் நோக்கி...
33 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
34 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
35 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
36 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
37 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
38 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
39 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
40 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
41 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
42 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
43 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
44 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
45 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
46 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
47 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
48 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
49 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
50 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
51 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
52 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
53 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
54 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
55 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
56 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
57 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
58 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
59 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
60 எது வணக்கம்..?
61 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
62 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
63 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
64 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
65 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
66 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
67 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
68 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
69 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
70 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
71 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
72 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
73 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
74 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
75 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
76 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
77 மனைவியை_நேசிங்கள்..
78 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
79 அம்மா! அம்மா!
80 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
81 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
82 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
83 இமாம்களும் மத்கபுகளும்.
84 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
85 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
86 பராஅத் இரவின் சிறப்புகள்
87 வாப்பா!
88 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
89 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
90 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
91 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
92 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
93 இதிலென்ன வெட்கம்?
94 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
95 பழையன கழிதலும் புதியன புகுதலும்
96 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
97 கற்பில் கவனம் தேவை
98 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
99 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
100 இஸ்திஃகாராவின் சிறப்பு
101 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
102 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
103 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
104 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
105 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
106 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
107 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
108 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
109 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
110 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
111 இறுக்கமும் இரக்கமும்
112 இஷா தொழுகையும் இரவு உணவும்
113 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
114 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
115 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
116 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
117 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
118 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
119 பெயர்களை நினைவில் வைப்போம்
120 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
121 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
122 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
123 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
124 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
125 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
126 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
127 ஒரு 2.5 கதை
128 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
129 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
130 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
131 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
132 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
133 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
134 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
135 குறைகளை மறைத்தல்
136 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
137 நல்ல பெண்மணி
138 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
139 💥 யார் அந்த மாமனிதர்..?
140 ஈர்ப்பை விதைப்போம்!
141 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
142 யார் இந்த துலுக்கன்?
143 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
144 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
145 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
146 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
147 நிம்மதி - சிறுகதை
148 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
149    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
150 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
151 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
152  வாழ்க்கை வாழ்வதற்கே !
153 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
154 விற்கப்படும் மார்க்கம்
155 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
156 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
157 பார்வைகள் பலவிதம் !
158 நேர மேலாண்மை / திட்டமிடல்
159 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
160 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
161 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
162 தந்தைகளே! கவனியுங்கள்
163 வரலாறு புகட்டும் பாடம்
164 அல்குர்ஆன் என்னும் மதுரம்
165 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
166 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
167 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
168 நாம் தான் முயல வேண்டும்.
169 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
170 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
171 கற்பா? கல்லூரியா?
172 கசாப்புத் தொழில் சிறந்தது....
173 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
174 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
175 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
176 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
177 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
178 என் ஹிஜாப் என் உரிமை!!!
179 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
180 முகமாகும் பெண்கள்!!
181 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
182 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
183 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
184 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
185 செல்போன்கள்... ஜாக்கிரதை!
186 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
187 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
188 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
189 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
190 ஈமானே-உன் விலையென்ன?
191 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
192 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
193 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
194 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
195 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
196 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
197 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
198 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
199 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
200 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
201 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
202 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
203 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
204 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
205 அறிவைத் தேடுவோம்!
206 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
207 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
208 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
209 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
210 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
211 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
212 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
213 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
214 “வேர்கள்” வரலாறு!
215 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
216 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
217 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
218 மனிதனின் தேவை ! – மன அமைதி
219 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
220 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
221 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
222 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
223 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
224 பேச்சு,மெளனம்
225 ஜனாஸா - மைய்யத்
226 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
227 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
228 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
229 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
230 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
231 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
232 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
233 வலிமார்கள் என்பவர்கள் யார்?
234 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
235 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
236 மனித குல விரோதி
237 எனது பெயர் ஜனாஸா!
238 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
239 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
240 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
241 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
242 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
243 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
244 தமிழரும் இசுலாமியரும்
245 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
246 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
247 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
248 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
249 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
250 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
251 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
252 கற்பனைகளும் இஸ்லாமும்
253 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
254 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
255 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
256 மது ஒரு பெரும் பாவம்
257 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
258 பெற்றோர்களைப் பேணுவோம்!
259 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
260 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
261 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
262 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
263 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
264 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
265 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
266 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
267 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
268 மறுமை வாழ்வை நேசிப்போம்!
269 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
270 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
271 சுதேசி சிந்தனைகள்.......
272 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
273 கல்வி நல்லோர்களின் சொத்து!
274 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
275 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
276 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
277 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
278 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
279 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
281 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
282 அறிவைத் தேடுவோம்!
283 ஆக்காதீர் ஆசனங்களாக
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
285 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
286 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
287 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
288 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
290 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
291 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
292 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
293 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
294 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
295 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
296 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
297 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
298 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
299 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
300 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
301 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
302 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
303 விசுவரூபம் ஒரு விளக்கம்
304 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
305 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
306 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
307 கண்ணாடிகள் கவனம்
308 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
309 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
310 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
311 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
312 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
313 கருத்து வேறுபாடுகள்.
314 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
315 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
316 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
317 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
318 ஓ! என் இளைய சமுதாயமே!
319 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
320 வீண் செலவு வேண்டாமே