Tamil Islamic Media

ஓ! என் இளைய சமுதாயமே!

இன்றய நவநாகரீக அறிவார்ந்த உலகில், நாம் படிக்கும் பத்திரிக்கை செய்திகளானாலும், பரிமாறிக் கொள்ளப்படும் மின்னஞ்சல்களாக இருந்தாலும் பரவலாக நாம் கண்டு பதைக்கக் கூடிய ஒரு செய்தி தான் காதல் கல்யாணங்கள். குறிப்பாக நமது சமுதாய இளம் தலைமுறையினரின் நடவடிக்கைகள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை, இலைமறை காயாக இருந்த பருவ வயது காதல், சினிமா, தொலைக்காட்சித் தொடர் போன்ற சமூக சீர்கேடுகளால் இன்று மலிவு சரக்காகி விட்டது. கல்லூரிக் காதல் கரை கடந்து பள்ளிக்காதலாகிப் போனதற்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி.

உயர் கல்வியில், வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. எனவே இயல்பாக அம்மக்களிடம் கல்வி ஆர்வம் குறைந்துள்ளது என்ற குமுறலோடு தங்களுக்கான உரிமைகோரி சமுதாயத் தலைவர்கள் போராடியதை இன்றய இளைய சமுதாயம் எந்த வகையில் பயன்படுத்துகின்றது என்பதனை எண்ணும் போது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஒரு கல்லூரி. அதில் இறுதியாண்டு பயிலக் கூடிய ஒரு வகுப்பறையில் இரண்டு முஸ்லிம்கள். ஒரு மாணவன். ஒரு மாணவி. இருவருக்கும் ஒரே நோய். அதாவது காதல் நோய். ஒருவர் மீது ஒருவருக்கு அல்ல. மாறாக இருவரும் காதலிக்க தேர்வு செய்தது மாற்று மதத்தவரை. அதிலும் இந்த முஸ்லிம் மாணவி ஒருபடி முன்னே சென்று கல்லூரி இறுதித் தேர்வை புறக்கணித்து விட்டு தனது மாற்று மத காதலனை மணம் முடித்துக் கொண்டார்.

அடுத்ததாக,

சென்னையிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு தொழிற்நகரம்.

அங்கு கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்டு &






No articles in this category...