Tamil Islamic Media

ரஹீக் - முஹம்மத் நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு

Previous பதிப்புரை
 ரஹீக் - முஹம்மத் நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு
Next

ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு

பெயர்: ஸஃபியுர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அக்பர்.

உத்தர பிரதேச மாநிலம் ஆஜம் கட் மாவட்டத்திலுள்ள  முபாரக்பூர் எனும் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ஹுஸைனாபாத் எனும் கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு ஆசிரியர் பிறந்தார்.

1948ஆம் ஆண்டு தாருத்தஃலீம்  (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் அடிப்படை மற்றும் தொடக்கக் கல்வி கற்க சேர்ந்தார்.

1954ஆம் ஆண்டு இஹ்யாவுல் உலூம் (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் நடுநிலைக் கல்வி பயில சேர்ந்தார்.

1956ஆம் ஆண்டு ஃபைஜ் ஆம் (மவ்வு, உ.பி.) என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்து 1961ஆம் ஆண்டு ஆலிம் மற்றும் முஃப்தி பட்டம் பெற்றார்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் கல்வித் துறையால் அங்கீகக்கப்பட்ட பல இஸ்லாமிய பட்டங்களையும் ஆசிரியர் பெற்றுள்ளார். அவை: 1959ஆம் ஆண்டு 'மவ்லவி". 1960ஆம் ஆண்டு 'ஆலிம்". 1972ஆம் ஆண்டு 'ஃபாஜில் அதப்". 1978ஆம் ஆண்டு 'ஃபாஜில் தீனியாத்" ஆகிய பட்டங்களாகும்.

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய கல்விக்கூடங்களில் நடந்த தேர்வுகள், அரசாங்கத் தேர்வுகள் அனைத்திலும் ஆசிரியர் முதல் இடத்திலேயே வெற்றி பெற்றார். பணியாற்றிய பொறுப்புகளும் இடங்களும்

1961 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின் இலாஹாபாத் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் கல்விப் பணியாற்றினார்.

1963லிருந்து 1965 வரை ஃபைஜ் ஆம் மத்ரஸாவில் ஆசிரியராக பணியாற்றினார்.

1966லிருந்து 1968 வரை தாருல் ஹதீஸ்| (மவ்வு, உ.பி.) மத்ரஸாவில் மூன்றாண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.

1969 லிருந்து 1971 வரை மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபைஜுல் உலூம் என்ற இஸ்லாமியக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி கல்லூரியை நிர்வகித்தல், பாடம் நடத்துதல் ஆகிய பணிகளுடன் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

1972லிருந்து 1973 வரை முபாரக்பூரில் உள்ள தாருத்தஃலீம் என்ற மத்ரஸாவில் ஆசிரியராக பணியாற்றினார்.

1974ல் வாரனாஸி நகரத்திலுள்ள ஜாமிஆ ஸலஃபிய்யா என்ற இஸ்லாமியக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். இந்நூல் எழுதிய பிறகு மதீனாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் அவரை அங்கு அழைத்துக் கொண்டது.

ஆசிரியர் அவர்கள் உருது மற்றும் அரபி மொழியில் மேலும் பல நூல்கள் எழுதியுள்ளார். மேலும் பனாரஸிலிருந்து வெளிவரும் முஹத்திஸ் என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அல்லாஹ் அவர்களுக்கு முழுமையான உடல் சுகத்தையும், மேன்மேலும் தங்களின் கல்வியால் சமுதாய மக்களுக்கு பயனளிக்கவும் நல்வாய்ப்பு அருள்வானாக! இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு ஈடேற்றத்தையும் உயர் பதவிகளையும் வழங்குவானாக! ஆமீன்!!

 




Previous பதிப்புரை
 ரஹீக் - முஹம்மத் நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு
Next