Tamil Islamic Media ::: PRINT
சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?

சட்டம் என்பது சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் நிலைகளும், தேவைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மனித அறிவு காலத்தாலும், பார்வையாலும் குறுகியது; வரையறுக்கப்பட்டது. மேலும் சட்டமியற்றுபவர்களின் பார்வைகள் ஒருபக்கச் சார்பாக இருப்பது இயல்பு.

இதனால் மனிதக் கரங்கள் இயற்றிய சட்டங்கள் அதன் ஓட்டைகளைக் காட்டிக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இந்தக் குறைபாடுகளை புத்திசாலிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மனிதக் கரங்கள் இயற்றிய சட்டங்கள் இறை நம்பிக்கையிலிருந்து (ஈமான்) துளிர்த்தது அல்ல. அது தனி மனித ஒழுக்கத்திற்கு வழி காட்டுவதில்லை.

ஒரு மனிதன் இந்தச் சட்டங்களை உடைத்து, மீறி நடப்பானேயானால், அவனுக்கு எந்தக் குற்ற மனப்பான்மையும் வருவது இல்லை. அவன் வருங்கலாத்தில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை.

சட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் கண்களுக்கு இவர்கள் குற்றவாளிகள் என்று தெரியாதவரை இவர்கள் எந்தக் கவலையுமின்றி ஊர் சுற்றலாம்.

அப்படியே அவர்கள் அகப்பட்டுக் கொண்டாலும் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகளே! இப்படித்தான் சட்டம் அவர்களைப் பார்க்கச் சொல்கிறது.

ஆனால் இறை உதவியின் அடிப்படையில் அமைந்த சட்ட முறையில் இம்மாதிரி குறைபாடுகள் இல்லை.

தனி மனிதனின் நம்பிக்கையையும், மனசாட்சியையும் நன்கறிந்து, அதே போல் சமுதாயத்தின் நாடித் துடிப்பையும் நன்கறிந்து இறைச்சட்டம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

இதன் அர்த்தங்களை அலசிப் பார்ப்பதிலோ, இதனைப் புரிந்து கொள்வதிலோ எந்தச் சிரமுமில்லை. இது மிகவும் தெளிவாக, அழகாக வகுக்கப்பட்டுள்ளது. இதனை விளங்குவதற்கு பெரிய சட்ட ஞானமோ, இடைத்தரகர்களோ தேவையில்லை. இறைச்சட்டம் காலத்தாலும், இடத்தாலும் கட்டுப்பட்டதில்லை. அது கடந்த காலத்தின் நாள் குறிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது வருங்காலத்தில் செயல்படுத்துவதற்கு, இன்னும் விரிவுபடுத்துவதற்கு நெகிழ்ச்சித்தன்மை கொண்டது.

இதெற்கெல்லாம் காரணம் மிக எளிதானது. அனைத்து அதிகாரங்களும் கைவரப் பெற்ற, அனைத்தையும் அறிந்த அந்த அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்தச் சட்டம் வருகிறது.

அவன் ‘அலீம்’ (யாவையும் அறிந்தவன்). அவனது ஞானம் காலத்தாலும், இடத்தாலும் கட்டுப்பட்டதல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

யாரும் அவனை விட இரக்கமுள்ளவனாகவும், கருணையாளனாகவும் இருக்க முடியாது. அவனது இரக்கமும், கருணையும் மனித இனத்திற்கு மட்டுமல்ல, இந்த மொத்த உலகத்தின் மேலும் படர்ந்திருக்கிறது. விலங்கினங்களுக்கும், தாவர இனங்களுக்கும், இன்னும் அனைத்துப் பொருட்களுக்கும் அவனது கருணையின் கடாட்சம் விரிந்து செல்கிறது.

எந்தப் பாரபட்சமுமில்லாமல், சட்டத்தை மட்டுமே மனதிற்கொண்டு, உண்மையான, நியாயமான, நீதியான, அனைத்து மக்களுக்கும் உகந்த சட்டத்தை இயற்றக்கூடிய ஒருவன் இருக்க முடியுமென்றால் அவன் அல்லாஹ்வாகத்தான் இருக்க முடியும். அவனைத்தவிர வேறு எந்தக் கொம்பனாலும் முடியாது.

இஸ்லாம் கூறும் சட்டம் மனிதர்களுக்கிடையில் உள்ள விவகாரங்களைத் தீர்மானிக்கிறது. அதே போல் சுற்றுப்புறச் சூழல்களுக்கிடையிலான உறவுகளையும் எடுத்தியம்புகிறது. அது நீதிமிக்கதாயும், தராசின் முள்ளைப் போல் நடுநிலையோடும் இருக்கிறது.

சட்டத்தை மீறி யாரும் இருக்க முடியாது. எல்லோரும் சட்டத்திற்குட்பட்டவர்களே!

இந்த எளிய, அடிப்படை விஷயங்களே ஒவ்வொருவரையும் அவர்களது வாழ்வைச் செம்மைப்படுத்த உத

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.