Tamil Islamic Media ::: PRINT
கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது

 

عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ


 திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ

உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه

திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது

وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ

அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய்

شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ

ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது

في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح

ஒவ்வொரு நிலப்பகுதியும் மரண வேதனையால் அலறியது

ضَجَّت عَلَيكِ مَآذِنٌ وَمَنابِرٌ

மிம்பர்களும் மினாராக்களும் உனக்காக ஓலமிட்டன

وَبَكَت عَلَيكَ مَمالِكٌ وَنَواحِ

பேரரசுகளும் மாகாணங்களும் உனக்காக அழுதன

الهِندُ والِهَةٌ وَمِصرُ حَزينَةٌ

இந்தியா துக்கத்தால் தடுமாறியது; எகிப்து கவலையுற்றது

تَبكي عَلَيكِ بِمَدمَعٍ سَحّاحِ

இவை உனக்காக கண்ணீர் பெருக்கெடுக்க அழுதன

وَالشامُ تَسأَلُ وَالعِراقُ وَفارِسٌ

ஷாம்,ஈராக் மற்றும் பாரசீகம் வினவின

أَمَحا مِنَ الأَرضِ الخِلافَةَ ماحِ

உங்களுடைய நிலத்திலிருந்து கிலாஃபத்தை யாராவது துடைத்தெறிந்து விட்டார்களா?

وَأَتَت لَكَ الجُمَعُ الجَلائِلُ مَأتَماً

மேன்மை பொருந்திய நன்மக்கள் உன்னுடைய அடக்கத்தில் பங்கெடுத்தனர்

فَقَعَدنَ فيهِ مَقاعِدَ الأَنواحِ

அவர்கள் ஒப்பாரி வைக்குமிடத்தில் அமர்ந்தார்கள்

يا لَلرِجالِ لَحُرَّةٍ مَوؤودَةٍ

ஓ ! மனிதா ! உயிருடன் புதைக்கப்பட்ட கண்ணியமிக்கவளை கவனி !

قُتِلَت بِغَيرِ جَريرَةٍ وَجُناحِ

இவள் எந்த குற்றமோ பாவமோ செய்யாமல் கொல்லப்பட்டிருக்கிறாள்

(“امير الشعراء – கவிஞர்களின் அமீர்” என்று போற்றப்படும் எகிப்திய கவி அஹ்மது ஷவ்கி அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபா வீழ்த்தப்பட்டபோது மனம் வருந்தி பாடிய அரபுக் கவிதைகளிருந்து சில வரிகள்)

உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் இஸ்தான்புல் நகரில் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு உமிழ்ந்தார்.

“The situation now is that Turkey is dead and will never rise again because we have destroyed its moral strength, the Khilafah and Islam.”

“துருக்கி இப்பொழுது வீழ்ந்துவிட்டது.. அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்ட சக்தியான கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் நாம் வீழ்த்திவிட்டோம்.”

நபி صلى الله عليه وسلمஅவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உஸ்மானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை, கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது.

கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் தகர்க்கும் முதல் முயற்சியாக பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாவது சிலுவைப்போரை போப் இரண்டாம் உர்பன் துவக்கி வைத்தார்..எனினும் இவர்களின்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.