Tamil Islamic Media ::: PRINT
செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!

- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி

 பொருளே வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு தன்னலம் ஒன்றே இலக்கு   என்றாவதில் வியப்பென்ன இருக்க முடியும்?
இங்கே தனிமனித வாழ்விலும் சமூக வாழ்க்கையிலும் மனசாட்சிக்கோ பண்பாட்டிற்கோ அறவே இடமில்லை. தனிமனிதன் தன் நலத்தைப் பேணுவதிலும் எவ்வழியிலாவது வாழ்க்கையை அனுபவிப்பதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றான்.


பொதுவாழ்வோ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசுபட்டுக் கிடக்கிறது. பொதுவாழ்க்கையின் அடிப்படையே பொதுநலன்தான். ஆனால், இன்றைய சமூக அவலங்களை நோக்கும்போது தன்னலத்தின் தன்னிகரற்ற போட்டிக் களமாகப் பொதுவாழ்வு மாறிவிட்டிருக்கிறது.


இதற்கிடையில், சுயநலத்தைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் அறிவியல் முன்னேற்றமும் புதிய கண்டுபிடிப்புகளும் பெரும்பங்காற்றிவருகின்றன. தொலைக்காட்சியும் இணையதளமும் குடும்ப உறுப்பினர்களிடையே பெரிய தடுப்புச் சுவரை ஏற்படுத்தி, ஒட்டாமல் செய்துவிட்டன. ஒவ்வொருவரும் தனித்தனி உலகத்தில் சஞ்சரிப்பதால் அடுத்தவரைப் பற்றிக் கவலைப்பட யாருக்கும் நேரமில்லை.


கைப்பேசி வந்ததிலிருந்து சாலையில் செல்லும் மனிதனுக்கு, எதிரில் வருபவனைக் கண்டு முகம் மலரவோ முகமன் கூறவோ தோன்றுவதில்லை. உடன் இருப்பவனை மறந்து, எங்கோ இருப்பவனுடன், அல்லது இருப்பவளுடன் கதைப்பதற்கே அவனுக்கு, அல்லது அவளுக்கு நேரம் போதவில்லை.


இந்த லட்சணத்தில் இறையுணர்வு, இறைவன் எழுதிய விதியைப் பொருந்திக்கொள்ளல், உள்ளதைக் கொண்டு போதுமாக்கல், இருப்பதைவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படாமை, நாம் வாழ பிறர் வாழ்க்கையைக் கெடுக்காமலிருத்தல் என்பன போன்ற உயர்பண்புகளுக்கு எங்கே இடமிருக்கப்போகிறது!


குழந்தைச் செல்வம்


குழந்தைப் பாக்கியம் என்பது, உண்மையிலேயே இறைவன் வழங்கும் மாபெரும் கொடை என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. கோடி கோடியாகப் பணம் இருந்தும் சொத்துப்பத்துகள் இருந்தும் எல்லாம் யாருக்காக என்ற கேள்வி எழும்போது, குழந்தைச் செல்வம்தான் பதிலாக வந்து நிற்கும்.


சிலர் ஆண் குழந்தையை விரும்புவர்; அவர்களுக்குப் பெண்குழந்தையே திரும்பத் திரும்பப் பிறக்கும். சிலர் பெண் குழந்தைக்காக ஏங்குவதுண்டு; ஆனால், ஆண் குழந்தைகளே அவர்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு ஆணும் பெண்ணும் கலந்து பிறக்கும். அவ்வாறுதான், சிலருக்குக் குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விடும். எல்லாம் இறைவனின் நாட்டம்; அவனது எழுத்து.


அல்லாஹ்வுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உண்டு. தான் நாடுவதை அவன் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண் குழந்தைகளை (மட்டும்) அருள்கின்றான்; தான் நாடுவோருக்கு ஆண் குழந்தைகளை (மட்டும்) அருள்கின்றான். அல்லது ஆண்களையும் பெண்களையும் கலந்து கொடுக்கின்றான். தான் நாடுவோரை மலடியாக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்; பேராற்றல் மிக்கவன் (42:49,50) -என்கிறது திருக்குர்ஆன்.


இந்தத் தத்துவத்தைப் பொருந்தியே முன்னோர்கள் வாழ்ந்தார்கள்; அதிலும் திருப்தியோடுதான் வாழ்ந்தார்கள். அவர்களது வாழ்க்கையில் வசதிப் பற்றாக்குறை இருந்திருக்கலாமே ஒழிய, நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லை. காரணம், வாழ்வின் எதார்த்தத்தை அவர்கள் புரிந்திருந்தார்கள். இன்று வசதிகளுக்குக் குறைவில்லை; ஆனால், நிம்மதிதான் காசு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. காரணம், வாழ்க்கையின் நிஜத்தை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.


மேற்கண்ட வசனத்தி

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.