| ரமலான் வருகிறது !நலமள்ளி வருகிறது !
 கமழும் புகழ் நோன்பைக்
 கைகோர்த்து வருகிறது !
 ஈமானில் நாமெல்லாம்எத்தனை மார்க்கென்று
 தீர்மானம் செய்ய
 திருநோன்பு வருகிறது
 அருளாளன் அல்லாஹ்வின்அன்பள்ளி வருகிறது !
 திருமறை வந்த
 தேன்மாதம் வருகிறது !
 தக்வாவை கொஞ்சம்தட்டிடவே வருகிறது !
 ஹக்கனவன் கனிவையும்
 அறிவிக்க வருகிறது !
 அருமை நாயகம் (ஸல்)அறிவித்த நல் அமலை
 அருமையாய் நாம் ஏற்க
 அழைப்பாக வருகிறது !
 பத்திய மாதமென்றுபறைசாற்றி வருகிறது !
 உத்தம ஸஹாபாக்கள்
 உவந்த மாதம் வருகிறது !
 பசியின் ருசியறியபாங்கோடு வருகிறது ! கல்பில்
 கசியும் ஈரத்தைக்
 காட்டிடவும் வருகிறது !
 கஸ்தூரி வாசம்கமகமக்க வருகிறது !
 கைகளை ஈகையால்
 அலங்கரிக்க வருகிறது !
 ஏழை வீதிகளும்புன்னகைக்க வருகிறது
 எல்லோர் மனங்களுக்கும்
 சுகம் சேர்க்க வருகிறது !
 கலிமாவில் நாவெல்லாம்கலந்திட வருகிறது !
 தொழுகை தவறாதேயென
 தூது சொல்லி வருகிறது !
 லைலத்துல் கத்ரென்னும்ரம்மிய இரவுதனை
 தொழுகையால் அலங்கரிக்க
 சோபனமாய் வருகிறது !
 அன்று பத்ருப் போரில்அண்ணலார்க்கு வெற்றியினை
 தந்து பரிசளித்த
 தனிமாதம் வருகிறது !
 நோன்பின் மாண்பு சொல்லும்நூர்மாதம் வருகிறது !
 மாண்பில் நாம் மகிழ இபாதத்
 மணமள்ளி வருகிறது !
 ரமலான் வருகிறதுநலம் கொண்டு வருகிறது !
 கமழும் புகழ் நோன்பைக்
 கைகோர்த்து வருகிறது !
 - பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி நர்கிஸ்செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
 வெளியான கவிதை
 |