| – மஆலி   பிறை பிறந்தது – ரமளான்முகம் மலர்ந்தது
 தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில்தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது
 
 தலை தாழ்ந்தது – நெற்றி
 தரை தொட்டது
 நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவுஇறைவனுக்கே புகழனைத்தும் சமர்ப்பித்தது
 அலை ஓய்ந்தது – மனம்அமைதியானது
 தீயவழியில் வாழ்ந்த நேரம் காலமானது – இனிதூயவழியில் தொழுகை நோன்பில் வாழச் செய்தது
 பாதை புலர்ந்தது – அதில்பயணம் தொடர்ந்தது
 வேதவரியும் தூதர்மொழியும் துடுப்பானது – ஓடம்விரைந்து செல்லும் இலக்கு மறுமை வெற்றியானது
 மனதை வென்றிடு – மறுமைச்சுவனம் வென்றெடு
 விரும்புவதைத் துறப்பதுவே நோன்பென்பது – இறைவிருப்பப்படி வாழ்வதுவே தீன் என்பது
 பசி தாகமே – நல்லபயிற்சி தந்தது
 எளியோர்க்கு உணவளிக்கும் உணர்வு வந்தது – அதுஏழைசிரிப்பில் இறைவனையே காணச் செய்தது
 இறை வேதத்தை – தினம்இரைந்தோதியே
 கத்ரிரவுத் * தொழுகை நல்ல பயிற்சியானது – உளம்கசிந்துருகி இறையருளை நாடி நின்றது
 நிலா தேய்ந்தது – மாதம்நிறைவடைந்தது
 ஈகைத்திரு நாள் நினைவில் உளம் மகிழ்ந்தது – உலகம்இஸ்லாத்தின் மகிமைகளை அறியலானது
 வேதம் வந்தது – உலகம்விழித்துக் கொண்டது
 ஓதுவதைக் கடமையென உளமேற்றது – தினம்ஓதியுரை அறியாமை இருளகன்றது
 அழை என்பதும் – அதன்ஆணைவுணர்ந்திடு
 அழைப்பதிலே நபிவாழ்வு தியாகமானது – அதன்அடிப்படையில் உழைத்து உலகை உய்வித்திடு
 லைலத்துல் கத்ர் – குர்ஆன் அருளப்பட்ட மகத்தான இரவு நன்றி :சமரசம்
 16 -31 ஆகஸ்ட் 2010
 |