Tamil Islamic Media

ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !




நடுவண் அரசே!
நாசகாரக் கூட்டமே!
நானிலமே நகைக்குது
நல்லறமெலாம் கரையுது!
நாடிது ஆளவா?
நாங்களென்ன மாளவா?

அம்பானிக்கும் அதானிக்கும்
நாட்டைக் கொடுத்தாய்
காவிக்கும் கயவர்க்கும்
கோர்ட்டைக் கொடுத்தாய்!
நாடிது வாழவா?
நாங்களென்ன வீழவா?

கங்கையில் பிணஊர்வலம்
காஷ்மீரில் குண்டுமழை
காவேரியில் தமிழர்கனவு
கடலோரம் மீனவர்சிறை!
நாடிது நாடா?
நயவஞ்சகக் காடா?

மாட்டைத் தெய்வமாக்கி
மனிதனை பலியாக்கி
மதநல்லிணக்கம் தொலைத்து
மனிதநேயம் கரைத்து...
நாடிது பாரதமா?
நலிந்தோர்க்கு பாரமா?

இந்தியனே
இந்திய இஸ்லாமியனே
இணைந்திடு...!
பொதுசிவில் சட்டம்
பிசுபிசுத்துப் போக
போராடும் தருணமிது!

ஓடிவா!
ஓய்வறியாது ஓடிவா!!!

-- மிஸ்கீன்.






1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

3 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

4 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

5 செவி கொடு ; சிறகுகள் கொடு !

பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.

6 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 மரணம்.. ஒரு விடியல்..
9 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
10 வேதம் தந்த மாதம்
11 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
12 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
13 விரக்திக்கு விடைகொடு!
14 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
15 பெருமானே பெருந்தலைவர்
16 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........