Tamil Islamic Media

பெருமானே பெருந்தலைவர்

பெருமானே பெருந்தலைவர்

          (முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)

 

 அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம்

  அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும்

அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை !

  அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !!

சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு,

  சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு,

’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி

  சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !

 

அங்காச புரியினிலே, அழகுமலர் சோலையிலே

  அருள்மணக்கும் நிலையினிலே வானொலியாம் ஆறினிலே

மங்காத புகழ்படைத்த மாநபியின் திருவரவை

  மனமகிழ்ந்து பாடிடவே – கவிக்குயில்கள் வந்திடவே

சங்கை மிகுபுலவர் திரு அன்வர் தலைமையிலே

  சாந்தமிகு தென்றலோடு சங்கை ஹாஜி உ.காவும்

அங்கமர்ந்த வேளையிலே நாச்சியார் நற்படைப்பில்

  அழகுமிகு கவியரங்கம் ! அருமையுடன் இனி துவங்கும் !

 

ஒருலட்சம் அதனுடனே, இருபத்து நான்காயிரம்

  உயர்வான நபிமார்கள் உலகினிலே அவதரித்தார் !

திருநபிகள் நாதருக்குப் பிறந்ததினம் நாமெடுக்க ,

  தகுந்தபல காரணங்கள் தருகின்றேன் கேளுங்கள் !

இருபத்து நூற்றாண்டின் இணையற்ற பெருந்தலைவர்

  எம்பெருமான் நபிகளன்றோ? இணையில்லா தியாகியன்றோ ?

அரும்பிறப்பால் நற்குணத்தால் அகிலமெலாம் கவர்ந்து நிற்கும்

  அருமைமிகு திருநபியின் மகிமைகளைக் கூறுகிறேன் !

 

 

ஒன்றே கால் லட்சத்து நபிமார்கள் கொண்டுவந்த

  உயர் வேதம் தவ்ராத்தும் இன்ஜீலும் ஜபூர் – மூன்றும்

குன்றாத புகழுடனே சரித்திரத்தில் நின்றாலும் –

  கோமானே நீர்தந்த குர்ஆனே நிலைத்திருக்கும் !

நின்றாலும் குவலயத்தில் நீர்தந்த ஷரீஅத்தை

  நாடாளும் மன்னருக்கும், நடமாடும் எளியவர்க்கும்

  ஒன்றாக நீதி தரும் ! வளமான வாழ்வு தரும் !!

 

உலகத்தை ஆண்டுநின்ற உயர்குலத்து மன்னர்களின்

  உள்வாழ்வும் வெளிவாழ்வும் ஒவ்வொன்றும் வேறுபடும் !

குலத்தினிலே உயர்குலத்துக் குறைஷியெனப் பிறந்தாலும்

  கோமானே உம்வாழ்வில் இரண்டு பக்கம் என்றுமில்லை !

குலப்பெருமை கொண்டவர்கள்  கர்வத்தால் மடிந்திருப்பார் !

  குணந்தவறித் திரிந்தவர்கள் கேவலத்தால் அழிந்திருப்பார் !

நிலவுக்கும் கலங்கமுண்டு ! நீருக்கும் ‘கலங்கள்’ உண்டு !

  நிறைவான பொற்குணமாய் நீங்களன்றி யார்தானுண்டு?

 

பிறப்பென்னும் இறப்பென்னும் இறைவனிட்ட விதியுண்டு !

  பிறப்பினிலே சிரிப்பதுவும், பிரிவினிலே அழுவதுவும்

பிறந்து விட்ட மனுகுலத்தின் பழக்கத்தில் இன்றுமுண்டு !

  பெருமானார் பிறந்ததிலே பூமியெங்கும் மகிழ்வுண்டு !

இறந்தபின்பு நபியவரை எண்ணியென்னி வேதனையில்

  இருந்திடுவோம் எனப்பெருமான் இதயத்தில் எண்ணினரோ?

இறந்தாலும் இவ்வுலகம் இன்பத்தால் நிலைத்திருக்க

  இவ்வுலகில் பிறந்தநாளில் இறந்தபொருள் என்னவென்பேன்?

 

 

 

பெண்பெருமை பேசியவர் விதவையரை மணந்ததில்லை !

  பெற்ற அன்னை வாழ்விழந்து விதவையராய் ஆனபோதும்

கண்ணியத்தைக் கொடுப்பதற்கு பிறந்தமகன் துணிந்ததில்லை !

  கணவனுக்குப் பின், பெண்ணை வாழவைக்க யாருமில்லை !

கண்மூடித் தன்வாழ்வைக் கணவன் விட்டுப் போனபின்னே

  கண்ணியமாய் வாழ்வமைத்து வாழுவதே பெருமையென,

மண்ணகத்தில் நாட்டிவைத்த மன்னவராம் மாநபியை

  மதியுலகம் புகழ்கிறது ! மன்னர் வழி தொடர்கிறது !

 

கருப்புக்கும் வெள்ளைக்கும்






1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

3 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

4 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

5 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

6 செவி கொடு ; சிறகுகள் கொடு !
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
9 மரணம்.. ஒரு விடியல்..
10 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
11 வேதம் தந்த மாதம்
12 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
13 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
14 விரக்திக்கு விடைகொடு!
15 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
16 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........