Tamil Islamic Media

நபியின் மீது பிரியம்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவரிடம் அவர் தம் பெற்றோர் இன்னும் குழந்தைகள் இன்னும் மக்கள் அனைவரையும் விட நான் ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிரியத்திற்குரியவராக ஆகாதவரை உங்களில் ஒருவர் உண்மையான முஃமினாக முடியாது 
இந்த ஹதீஸில் நபியின் மீது ஒரு முஃமினுடைய பிரியம் எப்படி இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு முஃமினுடைய ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளமே அல்லாஹ் இன்னும் அவன் தூதர் மீது அவர் கொள்ளும் பிரியம் வைத்தே நிர்ணயம் ஆகும், சிலர் குறிப்பிடும் போது அல்லாஹ்வின் தூதர் மீது பிரியம் என்பது அவர்களின் வழிப்படி நடப்பது தான் அவர்கள் மேல் வைக்கிற தனிப்பட்ட பிரியம் என்பதெல்லாம் இல்லை என்ற ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர்.


இந்த ஹதீஸின் அடிப்படையில் நேரடியாக நபி மீது கொள்ளும் பிரியம் என்பதாகவே அர்த்தம் கொள்ளப்படும். இதற்கு சிறந்த உதாரணம் நபித்தோழர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் ஒரு முறை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து இந்த உலகத்தில் என் நப்ஸை தவிர உள்ள எல்லா பொருட்களையும் விட நீங்கள் எனக்கு உவப்பானவர்கள் என்று கூறினார்கள் அதற்கு நபியின் பதில் இவ்வாறு இருந்தது உமரே உங்களில் ஒருவருடைய ஈமான் பரிபூரணமாக ஆகாது அவர் தன் நப்ஸைவிட என் மீது பிரியம் கொள்ளாத வரை என்று கூறினார்கள் 


ஆகையால் தான் நபி அவர்கள் இந்த ஹதீஸில் உதாரணம் காட்டும் போது, இந்த உலகில் ஒரு மனிதன் இயற்கையாக பிரியப்படும் நபர்களை சுட்டிக்காட்டினார்கள் மகன் பெற்றோர் என்று இதை விளக்க இன்னொரு வசனம் மிகப்பொறுத்தமானதாக இருக்கும் 


நபியே நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை


ஆகையால் உண்மையாக நபியின் மீது பிரியம் வைக்ககூடியவர்களாக நம்மையும் நம் சந்ததிகளையும் உலக முஸ்லிம்களையும் உண்மை முஃமின்களாக ஆக்குவானாக ஆமீன்






1 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை

அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2 ஒற்றைச்செறுப்பு

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.

3 திரைகள் விலகட்டும்

“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது"

4 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)

5 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
7 முஜாஹிர்களும் மன்னிப்பும்
8 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
9 தங்க ஓடை: மனிதனின் பேராசை
10 பயணியே சற்று நில்
11 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
12 என் கண்ணாடி எங்கே?
13 நன்மைக்கு வழிகாட்டினால்
14 பொறாமைக்குரியோர் ....
15 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
16 ஈமானின் கிளைகள்
17 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
18 நற்செயல் எது?
19 பட்டாடை
20 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
21 பரிபூரணமான முஸ்லிம்
22 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
23 சுவர்க்கத்தின் சாவி
24 மக்களில் சிறந்தவர்
25 மறுமை
26 மறைவானவற்றை நம்புவது
27 அழகிய துஆ